<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=120.56.160.102</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=120.56.160.102"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/120.56.160.102"/>
	<updated>2026-06-04T22:06:32Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=339928</id>
		<title>கேசவன்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=339928"/>
		<updated>2024-08-24T09:44:17Z</updated>

		<summary type="html">&lt;p&gt;120.56.160.102: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&#039;&#039;&#039;கேசவன் என்ற பெயர்&#039;&#039;&#039; இந்து சமயத் தோத்திரமான [[விஷ்ணு சஹஸ்ரநாமம் |விஷ்ணு சஹஸ்ரநாமத்தில்]] இரண்டு முறை வரும் பெயர். 23-வது பெயராகவும், 648-வது பெயராகவும் வருகின்ற பெயர். விஷ்ணுவின் முக்கியமான பன்னிரு பெயர்களில் முதற் பெயர். இதற்கு பல விதப் பொருள்கள் சொல்லப்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[மகாபாரதம்|மகாபாரத]] காவியத்தில், [[திருதராட்டிரன்]] கிருஷ்ணரின் வேறு பெயர்களை கூறுமாறு [[சஞ்சயன்|சஞ்சயனிடத்தில்]] கேட்கும் போது, கிருஷ்ணருக்கு கேசவன் என்ற பெயரும் உள்ளதாக தெரிவித்தான்.&amp;lt;ref&amp;gt;[http://mahabharatham.arasan.info/2015/04/Mahabharatha-Udyogaparva-Section70.html கிருஷ்ணனின் பெயர்களும் பொருளும்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
* &#039;குழலழகர்&#039; அல்லது &#039;அழகிய கூந்தலை உடையவர்&#039; என்று ஒரு பொருள். [[ ஆதி சங்கரர் |ஆதி சங்கரருடைய]] உரையில் இதை &#039;கறுத்துச் சுருண்டு சேர்ந்து இணங்கி இருக்கும் அழகிய கேசங்கள் உள்ளவர்&#039; என்கிறார். நரசிங்க வடிவில் விஷ்ணுவின் பிடரிமுடி மிக அழகானது. வால்மீகி ராமாயணத்தில் ராமரின் கேசங்களின் அழகை மாரீசனும்,&amp;lt;ref&amp;gt; &#039;சிகீ கனக மாலயா&#039; வால்மீகி ராமாயனம். 3-38-14 &amp;lt;/ref&amp;gt; விசுவாமித்திரரும்&amp;lt;ref&amp;gt; &#039;காகபக்ஷதரோ தன்வீ&#039; வால்மீகி ராமாயணம் 1- 22 - 6 &amp;lt;/ref&amp;gt; வர்ணிக்கின்றனர். ஸ்ரீமத் பாகவதத்தில் கோபிகளும் கண்ணனின் கேசங்களை வர்ணிக்கின்றனர்.&amp;lt;ref&amp;gt; &#039;குடில குந்தலம் கோமளானனம்&#039;. ஸ்ரீமத் பாகவதம், 10-31-15. &amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
* கேசி என்னும் அசுரனைக் கண்ணன் கொன்றதால் கேசவன் என்ற பெயர் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. இதை ஆமோதித்து விஷ்ணு சஹஸ்ரநாமத்திலேயே &#039;கேசிஹா&#039; - கேசியைக் கொன்றவர் என்ற பெயரும் வருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
* க: - பிரம்மா, அ: - விஷ்ணு, ஈச: - சிவன் ஆகிய இம்மூன்று வடிவங்களையும் தம் வசத்தில் கொண்டவர், என்றும் இன்னொரு பொருள் கூறுகிறார் ஆதி சங்கரர். இதனால் &#039;கேசவ&#039; என்ற சொல், பெயரும் உருவமுமில்லாத பரம்பொருளைக் குறிப்பதாகும் என்பது அத்வைத வேதாந்தத்தின் கூற்று.&lt;br /&gt;
&lt;br /&gt;
* &#039;சூரியன் முதலானவர்களிடமுள்ள கிரணங்களுக்குரியவர்&#039; என்பது இன்னொரு பொருள். இதுவே வேறுவிதமாகவும் சொல்லப்படுகிறது: சூரியன் முதலிய ஒளி மண்டலங்களில் தன் நுண்ணிய ரோமம் போன்ற ஒளிக் கதிர்களைப் பரவச் செய்தும் அம்மண்டலங்களில் உள்ளுறைபவனாகவும் ஒளி விடுபவர்.&amp;lt;ref&amp;gt; மகாபாரதம், சாந்தி பர்வம், 350-48.&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
* பிரம்மா, விஷ்ணு, சிவன் இம்மூவரும் கேசங்கள் எனப்பெறுவர். அவர்களை சக்தியாகக்கொண்ட பரம்பொருள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
*அக்னி, சூரியன், வாயு, என்ற மூன்று சக்திகள் கொண்டவர்.&amp;lt;ref&amp;gt;ருக்வேத ஸ்ம்ஹிதை, 1-164-41.&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
*அசுரர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்குவதற்காக தேவர்களால் வேண்டப்பட்ட விஷ்ணு தனது முடியிலிருந்து கரு நிறமும் வெண்ணிறமும் கொண்ட இரு கேசங்களைப்பிடுங்கி இவை கண்ணனாகவும் பலராமனாகவும் தோன்றி உதவுவர் என வரம் தந்தார் மற்றும் அவர் அசுரர்களை கொன்று விட்டார் என [[விஷ்ணு புராணம்]] கூறுகிரது.&amp;lt;ref&amp;gt; விஷ்ணு புராணம், 5-1-59-63. &amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[பராசர பட்டர்]] [[அரி வம்சம்|ஹரிவம்சத்திலிருந்து]] மேற்கோள் காட்டி சிவன் விஷ்ணுவிடம் சொல்லியதாகச்சொல்கிறார்: &#039;க: என்றால் பிரம்மா, ஈசன் என்றால் நான் சிவன். நாங்களிருவரும் உன் உடலிலிருந்து பிறந்தோம். அதனால்  உன் பெயர் கேசவன்&#039;.&amp;lt;ref&amp;gt; ஹரிவம்சம், 279.47.131-48. &amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== திருவாய்மொழியில்==&lt;br /&gt;
&lt;br /&gt;
நம்மாழ்வார் [[திருவாய்மொழி|திருவாய்மொழியில்]] (10-2-1) கேசவன் என்னும் பெயரைச் சொல்லவே துன்பம் என்று பெயர் பெற்றன எல்லாம் கெடும்; ஞானம் பிறக்குமுன் செய்த பாவங்களும், பிறந்தபின் மறந்து செய்யும் பாவங்களும் தாமே அழியும். நாள்தோறும் கொடிய செயலைச் செய்யும் யமனுடைய தூதர்களும் வந்து கிட்டமாட்டார்கள், என்கிறார்:&lt;br /&gt;
&lt;br /&gt;
::கெடுமிடராய வெல்லாம் கேசவாவென்ன நாளும்&lt;br /&gt;
::கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும்குறுககில்லார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==துணை நூல்கள்==&lt;br /&gt;
: * சி.வெ. ராதாகிருஷ்ண சாஸ்திரி. ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம். சிமிழி வெங்கடராம சாஸ்திரி டிரஸ்ட். 1986.&lt;br /&gt;
&lt;br /&gt;
:* Shri Vishnu Sahasranama, with the Bhashya of Parasara Bhattar. Trans.Prof. A. Srinivasa Raghavan. Sri Vishishtadvaita Pracharini Sabha, Mylapore, Madras. 1983.&lt;br /&gt;
&lt;br /&gt;
:* Complete Works of Sri Sankaracharya, in the Original Sanskrit. Vol.V: Laghu Bhashyas. Samata Books. Madras. 1982&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
{{விஷ்ணு}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:திருமாலின் பெயர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:வைணவ சமயம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>120.56.160.102</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=464144</id>
		<title>மாதவன் என்ற சொற்பொருள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=464144"/>
		<updated>2024-08-24T08:32:42Z</updated>

		<summary type="html">&lt;p&gt;120.56.160.102: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&#039;&#039;&#039;மாதவன் என்ற பெயர்&#039;&#039;&#039; இந்து சமயத் தோத்திரமான [[விஷ்ணு சஹஸ்ரநாமம் |விஷ்ணு சஹஸ்ரநாமத்தில்]] 72-வது, 167-வது, 735-வது பெயராக  மூன்றுமுறை வருகின்ற பெயர். விஷ்ணுவின் முக்கியமான பன்னிரு பெயர்களில் மூன்றாவது பெயர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==&#039;மா&#039; என்பவளுடைய கணவன்==&lt;br /&gt;
&lt;br /&gt;
* &#039;மா&#039; என்றால் அலைமகளான லட்சுமி. அவளுடைய &#039;தவ:&#039;, அதாவது, கணவன் மாதவன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
* &#039;மா&#039; வை பெயர்ச்சொல்லாகக் கொண்டால் தாய், லக்ஷ்மி, அளவு என்று மூன்று பொருள்கள். வினைச் சொல்லாகக் கொண்டால் தன்னுள் அடக்கிக் கொள்வது, அளவிடுவது, பிரித்துப் பகிர்ந்து கொடுப்பது என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். உலகைக் கருவாகத் தன்னுள் அடக்கிக் கொள்வதால் அவள் தான் எல்லோருக்கும் தாய்;  &#039;மா&#039; எனும் (பரமனின்) பரம சக்தி.&lt;br /&gt;
&lt;br /&gt;
* &#039;மா&#039; வை &#039;அளவிடும் கருவி&#039; என்று கொள்ளும்போது, அளவிடும் கருவியாக  அளவிடப்படும் பொருளின் முன்னும் பின்னும் நின்று அளக்கப்பெறும் பொருளைவிட மிகப் பெரியதாக இருப்பவள். உலகைப் படைக்கு முன்னும், மறைந்த பின் உலகமிருக்கும் அந்நிலையிலும் தொடர்ந்து நின்று அவற்றை அளவில் அடக்கி அடையாளம் காட்டுபவள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
* செல்வத்தின் தேவதையான &#039;மா&#039; செல்வமாகி நின்று அதனை அதனிடத்தில் நிலைக்கவைத்து பகிர்ந்து கொடுப்பவள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==&#039;மாதவனு&#039;க்கு இதர பொருள்கள்==&lt;br /&gt;
&lt;br /&gt;
* ([[ஆதி சங்கரர்]] உரை) [[சாந்தோக்கிய உபநிடதம் |சாந்தோக்ய உபநிடத]]த்தில், மதுவித்தை&amp;lt;ref&amp;gt; இந்த சூரியன் தேவர்களுக்கு மது (அமிர்தம், தேன்) அவர்கள் உண்பதுமில்லை, பருகுவதுமில்லை. இவ்வமிர்தத்தைப் பார்த்தே களிப்படைந்துவிடுகின்றனர். &amp;lt;/ref&amp;gt; மூலம் சூரியனை தேனாக உபாசனை செய்து பிரம்மஞானம் பெறுகிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி மதுவித்தை மூலம் உணரப்பெறும் பரம்பொருள் &#039;மாதவன்&#039;.&lt;br /&gt;
&lt;br /&gt;
* ([[பராசர பட்டர்]] உரை) &#039;மா&#039; - மௌனம், &#039;த&#039; - தியானம், &#039;வ&#039; - யோகம் இவை மூன்றாலும் அறியத்தக்கவர் மாதவன். [[மகாபாரதம்]] உத்தியோக பர்வம் 71-4 இல் இதற்கு&amp;lt;ref&amp;gt; &#039;&#039;மௌனாத்தியானாச்ச யோகாச்ச வித்தி பாரத மாதவம்&#039;&#039; &amp;lt;/ref&amp;gt; சான்று உளது. ஆதி சங்கரரும் இச்சான்றை எடுத்தாள்கிறார். &lt;br /&gt;
&lt;br /&gt;
* (இரு உரையிலும்): &#039;மா&#039; எனப்படும் பரமாத்ம ஞானத்தை அளிப்பவர். இதற்கு &amp;lt;ref&amp;gt;&#039;&#039;மா வித்யா ச ஹரே: ப்ரோக்தா தஸ்யா ஈசோ யதோ பவான். தஸ்மான் மாதவ நாமாஸி...&#039;&#039; &amp;lt;/ref&amp;gt;  மேற்கோள் ஹரிவம்சத்திலிருந்து எல்லா உரையாளர்களும் எடுத்தாள்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
* &#039;மா&#039; என்பது சித்தத்தின் போக்கு. கண்ணால் கண்டுணர்ந்த பொருள் மனதைக் கட்டுப்படுத்த மனம் அப்பொருளின் வடிவை அடைகிறது. இன்னும் மற்ற பொறிகளினாலும் மனம் இப்படித்தான் கட்டுப்படுத்தப் படுகிறது. ஆக பல பொருள்களின் வடிவைப் பெறுவதால் மனம் ஒருநிலைப்படுவதில்லை.  மௌனம், தியானம், யோகம் இம்மூன்றும் மனதைக் கட்டுப்படுத்தப் பயன்படும். பொறிகளை வெளி உணர்விற்குச் செல்லாதபடி அடக்குதல் மௌனம். அப்பொழுது நூலறிவால் ஏற்பட்ட ஆன்மிக சிந்தனையில் மனம் ஈடுபடும். கருத்தால் உணர்ந்த இத்தத்துவங்களில் மனம் பதிந்திருப்பது தியானம். இம்மனப்பதிவு நிலைத்திருப்பது யோகம்.சித்தத்தின் போக்கை நிலைநிறுத்துவதுதான் யோகம்&amp;lt;ref&amp;gt;&#039;&#039;யோக: சித்தவிருத்தி நிரோத:&#039;&#039; - பதஞ்சலி யோக சூத்திரம் 1. &amp;lt;/ref&amp;gt; என்பர் யோகசூத்திரத்தை உலகுக்கருளிய [[பதஞ்சலி]] முனிவர்.ஆக, மௌனம், தியானம், யோகம் இவற்றால் சித்தம் போன போக்கில் போகாதபடி நிலைநிறுத்துபவர்&amp;lt;ref&amp;gt;&#039;&#039;மாம் சித்தவிருத்திம் தவதி தூரீகரோதி இதி மாதவ:&#039;&#039; &amp;lt;/ref&amp;gt; மாதவன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==இவற்றையும் பார்க்கவும்==&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[கேசவன்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
*[[நாராயணன் என்ற சொற்பொருள்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==துணை நூல்கள்==&lt;br /&gt;
&lt;br /&gt;
* ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம். சி. வெ. ராதகிருஷ்ண சாஸ்திரி. சிமிழி வெங்கடராம சாஸ்திரி டிரஸ்ட். 1986.&lt;br /&gt;
* ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்.  உரை ஆசிரியர் &amp;quot;அண்ணா&amp;quot;. ஸ்ரீ ராமகிருஷ்ண மடம். மயிலாப்பூர், சென்னை 4. 1959&lt;br /&gt;
* Vishnu Sahasranama. Compiled by Dr. Arulmallige Parthasarathy. Vishnu Sahasranama Trust, Bangalore. 2007.&lt;br /&gt;
* ஸ்ரீ ஜயமங்கள ஸ்தோத்திரம். (பதினொன்றாம் பாகம்).  பிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர். சேலம் லிட்டெரரி அச்சகம். 1964.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
{{விஷ்ணு}}&lt;br /&gt;
[[பகுப்பு: மந்திரங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:திருமாலின் பெயர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>120.56.160.102</name></author>
	</entry>
</feed>