<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=123.63.136.241</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=123.63.136.241"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/123.63.136.241"/>
	<updated>2026-06-04T18:33:50Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=193676</id>
		<title>சாத்தூர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=193676"/>
		<updated>2013-12-14T04:14:15Z</updated>

		<summary type="html">&lt;p&gt;123.63.136.241: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = சாத்தூர் &lt;br /&gt;
|latd = 9.37 |longd = 77.93&lt;br /&gt;
|locator position = right &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}&lt;br /&gt;
|மாவட்டம் = [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]] &lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர் &lt;br /&gt;
|தலைவர் பெயர் = தெய்சிராணி&lt;br /&gt;
|உயரம் = 56&lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2001 &lt;br /&gt;
|மக்கள் தொகை = 31274&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  =  3.83 &lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  = 91 4562 &lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = 626203 &lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு = TN 67 &lt;br /&gt;
|பின்குறிப்புகள்  = &lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;சாத்தூர்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Sattur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==புவியியல்==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.37|N|77.93|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Sattur.html |title = Sattur |work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 56&amp;amp;nbsp;[[மீட்டர்]] (183&amp;amp;nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.&lt;br /&gt;
pfhuug&lt;br /&gt;
==பெயர்க்காரணம் மற்றும் வரலாறு==&lt;br /&gt;
500 ஆண்டுகளுக்கு முன்னர் தத்தன் என அழைக்கப் படக்கூடிய ஒரு தீவிர பெருமாள் பக்தர் ஒருவர் இருந்தார்.அவர் பெருமாள் ஆலயங்களை எல்லாம் தரிசித்து கொண்டே ஊர் ஊராக செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறு செல்லும் போது வழியில் ஏதேனும் நதிகளை கண்டால் தன்னுடன் எடுத்து செல்லும் பெருமாள் திருமகள் மற்றும் பூமா தேவி சிலைகளை வைத்து பூஜை செய்து பின் எடுத்து செல்வதை வழக்கமாக் கொண்டிருந்தார். அவ்வாறாக ஒரு சமயம் தற்போதைய சாத்தூரின் வைப்பாற்று படுகையை கண்டு அங்கிருந்த அரச மரத்து அடியில் தான் கொண்டு வந்த சிலைகளை  வைத்து விட்டு உறக்கத்தில் ஆழ்ந்தார். காலை எழுந்து வழக்கம் போல பூஜைகளை முடித்து விட்டு உற்சவரின் சிலைகளை எடுத்து கொண்டு கிளம்ப முயற்சித்தார் அவரால் சிலைகளை அவ்விடம் விட்டு நகர்த்த முடியவில்லை. அப்பொழுது அருகில் இருக்கும் சாஸ்தா கோவிலில் இருந்து வருவதாக கூறிய ஒரு சிறுவன் பகவான் இவ்விடத்தில் இருக்க விரும்புகிறார். எனவே தாங்கள் அவரை இவ்விடத்தில் விடுங்கள் என கூறி விட்டு மாயமானான். அந்த தீவிர பக்தனால் உற்சவர் இவ்விடம் வந்தார் எனவே அப்பகுதி கட்ட தத்தன் என அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சாத்தூரிலிருந்து 50 மைல் அப்பால் உள்ள சேத்தூர் ஜமீந்தார் மிகவும் பண வசதி படைத்தவர் மிக்க பெருமாள் பக்தி உடையவர். ஆனால் பிறவியிலேயே இரு கண்களும் தெரியாமல் பிறந்தார்.&lt;br /&gt;
ஒரு நாள் அவரது கனவில்  பெருமாள் தோன்றினார் . அவருக்கு அந்த அரச மரமும் தெளிவாக தெரிந்தது. ஜமீந்தார் பெருமாளை பார்த்து பெருமானே என்னை பிறவியிலேயே இரு கண்களும் தெரியாதவனாய் படைத்து விட்டாய். நான் எப்படி உன்னை சேவிப்பேன் என கேட்டார். உடனே பெருமாள் உனக்கு இன்று முதல் ஒரு கண் தெரியும் நீ என்னை தேடி வந்து என்னை சேவிக்கும் கணமே உனது மறு கண்ணும் உனக்கு தெரியும் என கூறினார். உடனே அந்த ஜமின் தனது ஆட்களுடன் வெங்கட பெருமானை தேடி புறப்பட்டனர். அவர்கள் செல்லும் வழியில் தெற்கே அந்த பெருமான் இருப்பதை கண்டதும் உடனடியாக ஜமிந்தாரிடம் சொன்னார்கள். அவர் ஓடி வந்து பெருமானே என வணங்கவும் அவருக்கு மற்றொரு கண்ணும் பார்வை வந்தது.&lt;br /&gt;
மகிழ்ந்த அந்த ஜமின் பெருமாளுக்கு கோவில் கட்ட எண்ணினார்.&lt;br /&gt;
ஆனால் அங்கே சரியான இடம் அமைய வில்லை. எனவே கோவிலை சாஸ்தா கோவில் அருகே கட்டி அந்த பகுதிக்கு சாத்தூர் எனவும் அந்த பெருமாளை சாத்தூரப்பன் எனவும் அழைத்தனர்.&lt;br /&gt;
அந்த கோவில் மஹா கும்பாபிஸேகம் திருப்பதி குருக்கள் தலைமையில் வெகு விமர்சையாக நடந்தது. அப்பொழுது பெருமாள் குருக்கள் ஒருவரிடம் நான் இந்த இடத்திலிருந்து மேற்க்கு பகுதியில் ஒரு ஆல மரத்தின் அடியில் சமேதராக இருக்கிறேன் என்றவாறு கூறினார். இந்த விசயத்தை அறிந்த ஜமிந்தார் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது ஆல மரத்தடியில் வெங்கடாசலபதி காட்சி அளித்தார். அந்த குருக்கள் இந்த பகுதி [[படந்தால்]] என அழைக்கபடும் என கூறினர். அது மட்டுமல்லாமல் இந்த பகுதியெல்லாம் பெருமாள் குடி கொண்டிருப்பதால் இந்த பகுதி தென் திருப்பதி எனவும் அழைக்க படும் என மொழிந்தனர். அன்று முதல் இன்று வரை [[படந்தால்]] மற்றும் [[சாத்தூர்]] அருகருகே இரண்டு வெங்கடாசலபதியை தாங்கி நிற்கின்றன. ஆனி தேரோட்டம் வட்டம் வட்டம் சாத்தூரப்பன் [[படந்தால்]] சென்று தங்கி பின் தான் தேரில் எழுந்தருள்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;
==மக்கள் வகைப்பாடு==&lt;br /&gt;
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31,274 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.&amp;lt;ref name=&amp;quot;census&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&amp;amp;state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}&amp;lt;/ref&amp;gt; இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். சாத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 82%,  பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சாத்தூர் மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி ==&lt;br /&gt;
சாத்தூரில் ஸ்ரீ ச. இராமசுவாமி நாய்டு மெமோரியல் கல்லூரி அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==போக்குவரத்து==&lt;br /&gt;
தேசிய நெடுஞ்சாலை எண் 7ல் இவ்வூர் அமைந்துள்ளது. இங்கு நல்ல சாலை வசதியும், பொதுப் போக்குவரத்து வசதியும் இரயில் வசதியும் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
* [http://srnmcollege.com ஸ்ரீ ச. இராமசுவாமி நாய்டு மெமோரியல் கல்லூரி]&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
{{விருதுநகர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
{{TamilNadu-geo-stub}}&lt;/div&gt;</summary>
		<author><name>123.63.136.241</name></author>
	</entry>
</feed>