<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=223.181.214.123</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=223.181.214.123"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/223.181.214.123"/>
	<updated>2026-06-04T18:35:02Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=173684</id>
		<title>துறையூர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=173684"/>
		<updated>2019-02-27T17:24:36Z</updated>

		<summary type="html">&lt;p&gt;223.181.214.123: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
|வகை = தேர்வு நிலை நகராட்சி &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = துறையூர் &lt;br /&gt;
|latd = |longd = &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}&lt;br /&gt;
|மாவட்டம் = திருச்சிராப்பள்ளி &lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர்&lt;br /&gt;
|தலைவர் பெயர் = முரளி&lt;br /&gt;
|உயரம் = &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011 &lt;br /&gt;
|மக்கள் தொகை = 32439&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  =  &lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =  04327&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = 621010&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு = TN-48&lt;br /&gt;
|பின்குறிப்புகள்  = &lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;துறையூர்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Thuraiyur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.இங்கு எழில் மிகு பச்சைமலை மற்றும் புளிஞ்சோலை உள்ளது. பெருமாள் பாளையம் போன்ற அழகிய பசுமை மிகுந்த கிராமங்கள் உள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் வகைப்பாடு==&lt;br /&gt;
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,998 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.&amp;lt;ref name=&amp;quot;census&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&amp;amp;state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}&amp;lt;/ref&amp;gt; இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். துறையூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 80%,  பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==கோயில்கள்==&lt;br /&gt;
இங்கு ஐந்து புராதன கோயில்கள் உள்ளன. சிவன் கோயில், பெருமாள் கோயில், பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் (பெருமாள் மலை மேலே), கோவிந்தராஜ பெருமாள் கோயில் (பெருமாள் மலை கீழே) மற்றும் காசி விஸ்வநாதர் கோயில். சைவமும் வைணவமும் தழைத்து வளர்ந்த ஊர் துறையூர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===சிவன் கோயில்===&lt;br /&gt;
துறையூரிலிரிந்து ஆத்தூர் செல்லும் சாலையில் உள்ள இந்தக் கோயிலின் பெயர் &amp;quot;அருள்மிகு நந்திகேஸ்வரர் ஆலயம்&amp;quot;. இந்தக் கோயிலின் பொருட்டு துறையூருக்கு நந்திகேச்சுரம் என்றும் ஒரு பெயர் இருந்தது. மேலும் தீர்த்த புரி, வேணுபுரி என்ற பெயர்கள் இருந்ததற்கான சான்றாக இந்தக் கோயிலில் தீர்த்தபுரீஸ்வரர் மற்றும் வேணுபுரீஸ்வரர் சிலைகள் உள்ளன. இக்கோயில் அப்பர் பெருமானால் &amp;quot;நாடகமாடிட நந்திகேச்சுரம்&amp;quot; என்றும் &amp;quot;நல்ல துறையூர்&amp;quot; என்றும் பாடல் பெற்ற தலம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்===&lt;br /&gt;
துறையூரிலிரிந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் உள்ள புகழ்பெற்ற கோயிலாகும். இந்தக் கோயில் பெருமாள் மலையின் மேலே 960 அடி (290 மீ) உயரத்தில் உள்ளது. மலைக்கு மேலே செல்ல 5 கி மீ மலைப்பாதை உள்ளது. மேலும் நடந்து செல்வதற்கு 1500 படிகளும் படிக்கட்டில் ஏறுவோர் இளைப்பாற இரண்டு மண்டபங்கள் இடையிடையே கட்டப்பட்டுள்ளன. கரிகால சோழனின் பேரன் ஒருவர் தன் ஆட்சியின் எல்லைப் பகுதியில் இருந்த இந்த மலையின் மீதுள்ள ஒரு இலந்தை மரத்தடியில் தவமியற்றிய போது பெருமாள் வேங்கடாச்சலபதியாக பிரசன்னமாகி காட்சியளித்ததாகவும், அந்த மன்னனே இக்கோயிலில் உள்ள கருப்பண்ணார் அல்லது வீராசாமியாக வழிபடப்படுவதாகவும் நம்பப்படுகிறது. இங்குள்ள தசாவதார மண்டபத்தில் இசைத்தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணில் தட்டும்போதும் ஒவ்வொரு விதமான இசை கேட்பது இதன் சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைகளில் இங்கு வழிபடுவது பிரசித்தி பெற்றது. மேலும் ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவலத்தில் பங்குகொள்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>223.181.214.123</name></author>
	</entry>
</feed>