ச. பொன்னுத்துரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
| வரிசை 110: | வரிசை 110: | ||
* [http://amuttu.net/viewArticle/getArticle/356 வார்த்தைச் சித்தர்] {{Webarchive|url=https://web.archive.org/web/20150117204124/http://amuttu.net/viewArticle/getArticle/356 |date=2015-01-17 }}, [[அ. முத்துலிங்கம்]] |
* [http://amuttu.net/viewArticle/getArticle/356 வார்த்தைச் சித்தர்] {{Webarchive|url=https://web.archive.org/web/20150117204124/http://amuttu.net/viewArticle/getArticle/356 |date=2015-01-17 }}, [[அ. முத்துலிங்கம்]] |
||
* [http://arunmozhivarman.com/2015/04/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/ மானிட நேயம் மாண்புறப் பேசினார் எஸ்பொ] |
* [http://arunmozhivarman.com/2015/04/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/ மானிட நேயம் மாண்புறப் பேசினார் எஸ்பொ] |
||
== இணைப்புகள் == |
|||
* [https://amruthamagazine.com/2021/02/20/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/ எஸ்.பொ.வின் சடங்கு, அம்ருதா இதழ், டிசே தமிழன்] |
|||
* [https://puthu.thinnai.com/2022/01/02/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4/ எஸ். பொன்னுத்துரையின் எழுத்துகள், திண்ணை.காம், நடேசன்] |
|||
* [https://www.annogenonline.com/2017/04/24/es-po/ எஸ்.பொன்னுத்துரையின் 'ஆண்மை' சிறுகதை பற்றி அனோஜன்] |
|||
== உசாத்துணை == |
|||
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=4448 எஸ். பொன்னுத்துரை, தெ. மதுசூதனன், தென்றல்] |
|||
* [https://noelnadesan.com/2021/05/18/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/ எஸ் பொன்னுத்துரை- ஈழத்து செவ்வியல் எழுத்தர் - noelnadesan] |
|||
* [https://yarl.com/forum3/topic/262977-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/ எஸ்.பொன்னுத்துரை: மனிதாபிமானப் பாலியலை எழுத்துக்குள் கொண்டு வந்தவர் - ஏ.பீர் முகம்மது] |
|||
* [https://arunmozhivarman.com/2015/04/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/ மானிட நேயம் மாண்புறப் பேசினார் எஸ்பொ - arunmozhivarman] |
|||
* [https://ilakkiyanmursith.blogspot.com/2014/12/blog-post.html உலகத்தமிழ் இலக்கியத்தின் இலட்சிய புத்திரன் 'எஸ்.பொ.'எனும் எஸ்.பொன்னுத்துரை - ilakkiyanmursith] |
|||
* [https://iravie.com/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A/ எழுத்துலக எழுச்சி எஸ்.பொ: iravie] |
|||
[[பகுப்பு:1932 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1932 பிறப்புகள்]] |
||
17:03, 24 நவம்பர் 2025 இல் நிலவும் திருத்தம்
ச. பொன்னுத்துரை | |
|---|---|
| பிறப்பு | சண்முகம் பொன்னுத்துரை 24 மே 1932 நல்லூர், யாழ்ப்பாணம் |
| இறப்பு | November 26, 2014 (aged 82) சிட்னி, ஆத்திரேலியா |
| தேசியம் | அவுஸ்திரேலியா |
| மற்ற பெயர்கள் | இலங்கைத் தமிழர் |
| அறியப்படுவது | ஆசிரியர், எழுத்தாளர் |


ச. பொன்னுத்துரை (ச.பொ) (மே 24, 1932 - நவம்பர் 26, 2014) ஈழ இலக்கியத்தின் முதன்மைப்படைப்பாளிகளில் ஒருவர். ச. பொன்னுத்துரை இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டம் நல்லூரில் பண்டாரக்குளம் பகுதியில் மே 24, 1932-ல் பிறந்தார். தந்தை சண்முகம். தமிழ்நாடு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார். இதழாசிரியர், பதிப்பாசிரியர். ஆசிரியராகவும், பாடசாலை அதிபராகவும் இலங்கையிலும், நைஜீரியாவிலும் பணியாற்றினார். புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழ்ந்தார். அவரது படைப்புகளில் நாவல், சிறுகதை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல், வரலாறு ஆகியவை அடங்கும். ஆப்பிரிக்க நாவல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதில் தனி ஆர்வம் கொண்டிருந்தார். ஈழத்தின் முற்போக்கு இலக்கியத்திற்கு எதிராக உணர்வுகளையும், அழகியலையும் முன்வைக்கும் நற்போக்கு இலக்கியத்தை ஆரம்பித்து புதிய படைப்பாளிகள் நடுவே அலைகளை உருவாக்கினார்.
தனி வாழ்க்கை
ச. பொன்னுத்துரை ஈஸ்பரம் என்பவரை தன் இருபத்து நான்காம் வயதில் திருமணம் செய்துகொண்டார். ஈஸ்பரம் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்தார். இவர்களது பிள்ளைகள் மேகலா, அநுர, மித்ர, புத்ர, இந்ர. மகன் மித்ர (மித்திரா) அர்ச்சுனா என்ற பெயரில் கடற்புலிகள் இயக்கத்தில் இணைந்து ஈழப்போரில் பங்குபெற்றார், 1986-ல் மரணமடைந்தார். மகன் அநுர சிட்னியில் புகழ்பெற்ற மருத்துவர். புத்ர ஒரு விபத்தில் மரணமடைந்தார். பொன்னுத்துரை 1989-ல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குப் புலம் பெயர்ந்தார். ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றார்.
ஆசிரியப்பணி
பொன்னுத்துரை 1956-ல் விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்து இலங்கை மட்டக்களப்புக்கு இடம் பெயர்ந்தார். இங்கு ஆசிரியராகவும், பாடசாலை அதிபராகவும் பணியாற்றினார். 1982-ல் ஆப்பிரிக்காவின் நைஜீரியாவில் ஆசிரியராகவும், ஆங்கில மொழியியல் துறையின் தலைவராகவும், பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இதழியல்
- கொழும்பில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் ரஹ்மான நடத்திய 'இளம்பிறை' இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார் பொன்னுத்துரை.
- ஆஸ்திரேலியாவில் சிறிது காலம் வெளிவந்த 'அக்கினிக்குஞ்சு' என்ற பன்னாட்டு இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார்.
பதிப்பியல்
பொன்னுத்துரை சென்னையில் ’மித்ர’ பதிப்பகத்தின் மூலம் நூல்களை வெளியிட்டார்.
நாடக வாழ்க்கை
பொன்னுத்துரையின் சில நாடகங்கள் இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளில் மேடையேறின. தமிழ்நாட்டில் சில தொலைக்காட்சிகளிலும் சில தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.
எழுத்துலகில்
இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய இனி ஒரு விதி செய்வோம் என்ற நூலும் வெளிவந்துள்ளது. 1924 பக்கங்களில் வரலாற்றில் வாழ்தல் என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டார்.
நற்போக்கு
ஈழ இலக்கியத்தின் கலகக்குரலாக ஒலித்தவர் ச.பொ. கைலாசபதி, சிவத்தம்பி இருவராலும் முன்வைக்கப்பட்ட முற்போக்கு எழுத்திற்கு மாற்றாக 'நற்போக்கு' எழுத்தை புதிய படைப்பாளிகள், வாசகர்கள் நடுவே அறிமுகப்படுத்தினார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் கருத்து ரீதியாக முற்போக்கு எழுத்தாளர்களுடன் முரண்பட்டு 1960-களில் அதிலிருந்து விலகி 'நற்போக்கு'அணியைத் தொடக்கினார். அவருடன் இளம்பிறை ரஹ்மான், வ.அ. இராசரத்தினம் போன்ற சிலரும் வெளியேறினர்.
மொழிபெயர்ப்பு
ச. பொன்னுத்துரை ஆப்பிரிக்க நாவல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதில் தனி ஆர்வம் கொண்டிருந்தார். செம்பென் ஒஸ்மான என்ற செனகல் நாட்டு எழுத்தாளர் எழுதிய 'ஹால'(Xala) என்ற குறுநாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் கூகி வா தியங்கோ என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் 'Weep Not Child' என்ற நாவலை தமிழில் 'தேம்பி அழாதே பாப்பா' என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.
இலக்கிய இடம்
‘ஈழத்து இலக்கியப் பிதாமகர் என்று அழைக்கப்படும் ச.பொவின் முதன்மையான ஆக்கம் என்பது மெல்லிய கேலியுடன் யாழ்ப்பாணத்து நடுத்தர வாழ்க்கையைப் பார்க்கும் 'சடங்கு' என்ற குறுநாவல்தான். தனிமனித வாதத்தைத் தன் படைப்பு மனத்தில் இருந்து மட்டுமே பெற்றுக்கொண்டு தன் படைப்பாணவத்தினால் மட்டுமே நிலைநிறுத்த முயன்ற படைப்பாளி.
விருதுகள்
இவருக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2010 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் இயல் விருது வழங்கப்பட்டது.
படைப்புகள்
- வீ (சிறுகதைகள்)
- ஆண்மை (சிறுகதைத் தொகுதி)
- தீ (நாவல்)
- சடங்கு (நாவல்)
- அப்பையா
- எஸ்.பொ கதைகள்
- கீதை நிழலில்
- அப்பாவும் மகனும்
- வலை + முள்
- பூ
- தேடல்
- முறுவல்
- இஸ்லாமும் தமிழும்
- பெருங்காப்பியம் பத்து (தொகுப்பாசிரியர்)
- மத்தாப்பு + சதுரங்கம்
- ?
- நனவிடை தோய்தல்
- நீலாவணன் நினைவுகள்
- இனி ஒரு விதி செய்வோம்
- வரலாற்றில் வாழ்தல் (சுயசரிதை)
- ஈடு (நாடகம்)(அ.சந்திரஹாசனுடன் சேர்ந்து எழுதியது)
- மாயினி
- மணிமகுடம்
- தீதும் நன்றும்
- காந்தீயக் கதைகள்
- காந்தி தரிசனம்
- மகாவம்ச (மொழிபெயர்ப்பு)
மறைவு
எஸ். பொன்னுத்துரை 2014 நவம்பர் 26 அன்று சிட்னி கொன்கோர்ட் மருத்துவமனையில் காலமானார்[1]. இவரது ஒரு மகன் ஈழப்போரின் போது 1986 கடற்சமரில் இறந்த ஒரு மூத்த விடுதலைப் புலிப் போராளி ஆவார்.
மேற்கோள்கள்
- ↑ "Es Po passes away in Australia". தமிழ்நெட். 26 நவம்பர் 2014. Retrieved 28 நவம்பர் 2014.
வெளி இணைப்புகள்
- எஸ்பொ'வின் நூல்கள்
- வார்த்தைச் சித்தர் பரணிடப்பட்டது 2015-01-17 at the வந்தவழி இயந்திரம், அ. முத்துலிங்கம்
- மானிட நேயம் மாண்புறப் பேசினார் எஸ்பொ
இணைப்புகள்
- எஸ்.பொ.வின் சடங்கு, அம்ருதா இதழ், டிசே தமிழன்
- எஸ். பொன்னுத்துரையின் எழுத்துகள், திண்ணை.காம், நடேசன்
- எஸ்.பொன்னுத்துரையின் 'ஆண்மை' சிறுகதை பற்றி அனோஜன்
உசாத்துணை
- எஸ். பொன்னுத்துரை, தெ. மதுசூதனன், தென்றல்
- எஸ் பொன்னுத்துரை- ஈழத்து செவ்வியல் எழுத்தர் - noelnadesan
- எஸ்.பொன்னுத்துரை: மனிதாபிமானப் பாலியலை எழுத்துக்குள் கொண்டு வந்தவர் - ஏ.பீர் முகம்மது
- மானிட நேயம் மாண்புறப் பேசினார் எஸ்பொ - arunmozhivarman
- உலகத்தமிழ் இலக்கியத்தின் இலட்சிய புத்திரன் 'எஸ்.பொ.'எனும் எஸ்.பொன்னுத்துரை - ilakkiyanmursith
- எழுத்துலக எழுச்சி எஸ்.பொ: iravie