ஜன கண மன
| தமிழ்: மக்கள் பெருங்கூட்டத்தின் மனதில் ஆட்சி செய்பவள் நீ ஆங்கிலம்: "Thou Art the Ruler of the Minds of All People" | |
|---|---|
"ஜன கன மன" வின் தாள் இசை | |
| இயற்றியவர் | இரவீந்திரநாத் தாகூர், 11 திசம்பர் 1911
|
| இசை | இரவீந்திரநாத் தாகூர், 11 திசம்பர் 1911
|
| சேர்க்கப்பட்டது | 24 சனவரி 1950 |
| இசை மாதிரி | |
அமெரிக்க கடற்படையால் இசைக்கப்படும் ஜன கண மன இசைக்கருவி வடிவம் (அண். 1983) | |

சன கண மன... (Jana Gana Mana; வங்காளம்: জন গণ মন) இந்திய நாட்டுப்பண் ஆகும். இப்பாடல் வங்காள மொழியில், இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும். இந்த கீதத்தை முழுவதாக பாடுவதற்கு 52 விநாடிகள் ஆகும்.
பாடல்
சன கண மன அதிநாயக செய கே
பாரத பாக்கிய விதாதா.
பஞ்சாப சிந்து குசராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல சலதி தரங்கா.
தவ சுப நாமே சாகே,
தவ சுப ஆசிச மாகே,
காகே தவ செய காதா.
சன கண மங்கள தாயக செயகே
பாரத பாக்கிய விதாதா.
செய கே, செய கே, செய கே,
செய செய செய, செய கே.
தமிழாக்கம்
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ மொழி பெயர்ப்பான இது அரசு பாடநூல்களில் பயன்படுத்தப்படுகின்றது:
இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற
- நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.
நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும்
- மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்.
- வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.
நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில்
- எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின்
- இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால்
- வணங்கப்படுகிறது.
அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரப்புகின்றன.
இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு
- வெற்றி! வெற்றி! வெற்றி!