ஐந்தருவி
Jump to navigation
Jump to search
ஐந்தருவி (Aintharuvi) என்பது ஐந்து அருவிகளைக் கொண்ட ஒரு குழுவாகும். இது இந்தியாவில், தமிழ்நாட்டின் குற்றாலம் அருவிக்கு அருகில் உள்ளது. இது தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த பெயரின் ஆங்கில அர்த்தம் Five falls என்பதாகும். ஐந்து தலை நாகப்பாம்பைப் போல ஐந்து திசைகளிலும் அருவிகள் விழுவதால் இவை புனித பாம்பான ஆதிசேசனுடன் ஒப்பிடப்படுகின்றன.[1]
சுவாமி ஐயப்பன் மற்றும் விநாயகப் பெருமான் ஆகியோருக்கான கோவில்கள் இந்த அருவியின் அருகில் அமைந்துள்ளன.