கூடாரவல்லி
| வைணவம் தொடரின் ஒரு பகுதி |
|---|
கூடாரவல்லி என்பது வைணவக் கோயில்களில் மார்கழி திங்கள் 27-ஆம் நாளில் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். இந்த நாளில் ஆண்டாள் அரங்கநாதரை வழிபட்டு அவருடன் இணைந்ததாகக் கருதப்படுகிறது.[1][2] இந்தப் பண்டிகை ஆண்டாள் பாடிய திருப்பாவையின் 27-வது பாடலான “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” என்ற பாடலின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.
தொன்ம வரலாறு
ஆண்டாள், கண்ணனையே கணவனாக அடைய விரும்பி, மார்கழி மாதம் நோன்பிருந்து திருப்பாவை பாடினார். திருப்பாவையின் 27-வது பாடல், கண்ணன் தனக்கு அருள் செய்வான் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இந்தப் பாடலின் அடிப்படையில் கூடாரவல்லி கொண்டாடப்படுகிறது.
கொண்டாடும் முறை
மார்கழி 27ஆம் நாளில்வைணவ கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டாளின் பாடல்கள் பாடப்படுகின்றன, அக்கார அடிசில் (சர்க்கரைப் பொங்கல்) பிரசாதமாக வழங்கப்படுகிறது.
முக்கியத்துவம்
கூடாரவல்லி, ஆண்டாள அரங்கநாதருடன் இணைந்த நாளாகவும், பெண்களின் திருமண விருப்பங்களை நிறைவேற்றும் நாளாகவும் கருதப்படுகிறது
கூடாரவல்லி என்பது ஒரு வைணவப் பண்டிகை, இது ஆண்டாளின் பக்தியையும், அரங்கநாதருடன் அவர் இணைந்ததையும் குறிக்கிறது. இந்த நாளில், ஆண்டாளை வழிபடுவதும், திருப்பாவை பாடல்களைப் பாடுவதும் சிறப்பாகக் கருதப்படுகிறது